பழனிசாமி அணி அடக்கப்படுவர்! தினகரன் எச்சரிக்கை

270 0

ஜெயலலிதா இருக்கும்போது ‘நவ துவாரங்களை’ மூடி இருந்தவர்கள், தற்போது தறிகெட்ட நிலையில் ஓடுகின்றனர். அவர்கள் அடக்கப்படுவர். ஜெ., பாதையில் செல்லும் வரை இந்த ஆட்சிக்கு பாதிப்பில்லை,” என முதல்வர் பழனிசாமிக்கு, தினகரன் மிரட்டல் விடுத்துள்ளார்.அ.தி.மு.க., சசிகலா அணியின் துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், மதுரையில் நேற்று கூறியதாவது:

மேலுார் பொதுக்கூட்டம் மாநாடாக மாறிவிட்டது. விழாவிற்கு இடையூறு செய்யும் வகையில் தமிழக அரசு செயல்பட்டது. விழாவில்பங்கேற்க அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தோம்.’அ.தி.மு.க., அணிகள் இணைவதில் எனக்கு உடன்பாடில்லை’ என்பது பொய்யான குற்றச்சாட்டு. பொதுச் செயலர் நியமனத்தை ஏற்றவர்கள், என்னையும் துணை பொதுச்செயலராக ஏற்றனர்; இப்போது தொண்டர்களை குழப்புகின்றனர்.பிரமாண பத்திரத்தில் ஒன்றும், கட்சி தீர்மானத்தில் ஒன்றும் என கருத்து தெரிவித்து,

மோசடி செய்திருப்பதை சுட்டிக்காட்டவே, ‘420’ என்ற வார்த்தையை கூறினேன். அப்போதுகூடமுதல்வரை நேரிடையாக குறிப்பிடாமல் கண்ணியம் காத்தேன். ஆனால், அவர் கண்ணியம் காக்கவில்லை. அதேசமயம் நேரிடையாக என்னால் கூற முடியும்; எனக்கு பயமில்லை.எனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்காமல் மிரட்டுகின்றனர். கட்சி அலுவலகத்தில் சசிகலா படத்தை அகற்றி, ஏறிய ஏணியை
மிதித்தவர்கள்தான் தற்போது பதவியில் உள்ளனர்.இவ்வாறு கூறினார்.

 

Leave a comment