மர்மமாக மரணித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் காவலரணிலிருந்து மீட்பு

311 0

மர்மமான முறையில் மரணமான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று (14) அதிகாலை ஆரையம்பதி கர்பலா பொலிஸ் காவலரணிலிருந்து மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரான எஸ்.திலகரத்ன (வயது 44) என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

கந்தேவத்த கெத்தரமுல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வந்துள்ளார்.

சடலம் காத்தான்குடி ஆராத வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment