ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். பிரதமர் மோடியிடம் மண்டியிட்டு கிடக்கிறார்கள் – ப.சிதம்பரம் கடும் சாடல்

209 0
ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். பிரதமர் மோடியிடம் மண்டியிட்டு கிடக்கிறார்கள் என ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பஸ் நிலையம் எதிரே உள்ள காமராஜர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தமிழக முதல்வர், அமைச்சரவையை 420 என்று கூறுகிறார்.
அதற்கு தமிழக முதல்வர் தினகரன் தான் 420 என்று கூறுகிறார். இதிலிருந்தே ஆட்சியின் அலங்கோலம் நன்றாக தெரிகிறது. இது அவமானம் இல்லையா?.
புராண வரலாற்றில் பாண்டவர்களும் கௌரவர்களும் கிருஷ்ணரிடம் மண்டியிட்டு கிடப்பது போன்று ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் பிரதமர் மோடியிடம் மண்டியிட்டு கிடக்கின்றனர்.
புகழ்பெற்ற திராவிட கலாச்சாரத்தில் உள்ள அ.தி.மு.க. பதவிக்காக இது போன்று மண்டியிட்டு கிடப்பது அவமானம் இல்லையா.
ஓ.பி.எஸ். மற்றும் இ.பி. எஸ். ஆகியோர் கூட்டு களவாணிகள். இந்த அரசு ஒரு நொடி கூட இனி நீடிக்க கூடாது. தமிழக அரசு கலைய வேண்டும், அல்லது கலைக்கப்படவேண்டும் என பா.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment