ரவி மீதான குற்றச்சாட்டுக்களை மறைக்கவே விஜயதாஷ மீது குற்றச்சாட்டு 

202 0
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்திப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறைக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரவி கருணாநாயக்க பதவி விலகியதை அடுத்து மகிந்த கனவில் இருந்து எழுந்தவர்கள் போல் ராஜபக்ஷ ஆட்சியின் குற்றங்கள் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் ஊழல் மோசடிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக தம்மீதான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்கே செயற்படுவதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment