விஜேதாச அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்?

370 0

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியிலிருந்து விஜேதாச ராஜபக்சவை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்குஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பீடம் முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மீது ஐதேகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

குறிப்பாகஅம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான முடிவை விமர்சித்துஅமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியமைஇவரது அமைச்சின் கீழ் உள்ள சட்ட மா அதிபர் திணைக்களம் ராஜபக்சக்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளை இழுத்தடிக்கின்றமைரவி கருணாநாயக்க விடயத்தில்சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த சட்டவாளர் நடந்து கொண்ட முறைபோன்ற விடயங்கள் தொடர்பாக விஜேதாச ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா அதிகாரி ஒருவரை இவர் விமர்சித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரவி கருணாநாயக்க பதவியை விட்டு விலகியதும்பாராளுமன்றத்தில் உள்ள இலங்கை பிரதமரின் செயலகத்துக்குச் சென்ற அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் விஜேதாச ராஜபக்சவை பதவி நீக்க வேண்டும் என்று கோரினர்.

அவர்களுடன் சென்ற பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்சன ராஜகருணஹெக்டர் அப்புகாமிஅசோக பிரியந்தசாந்த அபேசேகரசந்திப சமரசிங்கசமிந்த விஜயசிங்ககவிந்த ஜெயவர்த்தனதுசித ஜெயமான போன்றவர்களும் விஜேதாச ராஜபக்ச குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன்அவரை பதவி நீக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியிருந்தனர்.

இந்த நிலையில்விஜேதாச ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் அடுத்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொள்வார் என்று ஐ.தே..வின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment