20 ஆவது திருத்தச் சட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்காது-எம்.ஏ.சுமந்திரன்

271 0

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் இந்த திருத்தச் சட்டம் தொடர்பாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்தவில்லை.

இது தொடர்பாக அரசாங்கத்துடன் எந்த இணக்கப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை.

இந்த சட்டவரைவு தொடர்பாக குறிப்பிட்ட காலத்துக்குள் அரசியல் கட்சிகளுடன் தீவிரமான கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம்அரசாங்கம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

ஏனைய கட்சிகளின் ஒப்புதலுடன்இந்த சட்டவரைவை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவாக நிச்சயம் வாக்களிக்கும்.

மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்காக மாத்திரமே இந்த சட்டத் திருத்த வரைவைக் கொண்டு வருவதை ஏற்க முடியாது” என்றும் அவர் கூறினார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு, 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமாகும்.

Leave a comment