ஏகிப்தில் தொடரூந்துகள் மோதி விபத்து – 41 பேர் பலி

236 0

எகிப்தில் இரண்டு தொடரூந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஆகக் குறைந்தது 41 பேர் பலியாகினர்.

அத்துடன், சுமார் 120 பேர் வரை காயமடைந்ததாக அந்நாட்டுத் தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விபத்து அலெக்சென்ட்ரியா நகரப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தலைநகர் கெய்ரோவிலிருந்து சென்ற தொடரூந்தும் போர்ட் சைட் நகரிலிருந்து சென்ற தொடரூந்தும் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி அப்டெல் பட்டா அல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

Leave a comment