தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பொறுப்புடன் செயலாற்றும் – பிரதமர்

318 0

raதேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பொறுப்புடன் செயலாற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற உலக முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாங்கள் தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்துள்ளோம்.இதில் இரண்டு பிரதான கட்சிகள் அங்கம் வகிப்பதை போன்று சிறிய கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.

சகவாழ்வு மற்றும் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.