லண்டன்: கட்டிடங்களுக்குள் பாய்ந்த இரட்டை அடுக்கு பேருந்து

238 0

இங்கிலாந்தின் லண்டன் நகரில் இரட்டை அடுக்கு பேருந்து கட்டிடங்களுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் முக்கிய பகுதியான கால்பம் ரெயில் நிலையம் அருகே உள்ள லாவண்டர் ஹில் சாலையில் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்தானது திடீரென அருகிலிருந்த கட்டிடங்களை நோக்கி பாய்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

முக்கியமான சாலையில் விபத்து ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment