கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலேகம, கிரிமெட்டியான உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்ற வீடுடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக கொஸ்வத்தை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாகனங்களை கூலிக்குப் பெற்றுக் கொண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களால் கொள்ளைச் சம்பவங்களுக்காகப் பயள்னடுத்தப்பட்ட கார், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றோடு கொள்ளையிடப்பட்ட பொருட்கள், வீடுகளை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் மற்றும் பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் தலைவன் கடுமையான வகையில் போதைக்கு அடிமையாகியுள்ளவன் என்றும், கும்பலின் ஏனையவர்களும் கெசினோ உள்ளிட்ட வேறு சூதாட்டம் மற்றும் மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எனத் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.