அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்-சரத்குமார்

216 0

அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டியளித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்து பேசினார்.

இதற்காக இன்று காலை சரத்குமார் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமியை சரத்குமார் சந்தித்து பேசினார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.

பின்னர் வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்கி வருவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment