இந்தியா வருகிறார் நேபாள பிரதமர் 

218 0

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா இந்தியா செல்கிறார்.
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக எதிர்வரும் ஆகஸ்ட் 23ஆம் திகதி இந்தியா செல்கிறார்.

தியூபாவின் 5 நாள் சுற்றுப் பயணத்தின் நோக்கம் குறித்து நேபாள துணை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து, நிலநடுக்கத்துக்கு பிந்தைய மறுசீரமைப்பு பணிகள் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு குறித்து இந்த பயணத்தின் போது ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

Leave a comment