யாழில் அதிரடி; பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சற்று முன் ஆறுபேர் கைது!

245 0

யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வாள்வெட்டுக் கும்பலின் முக்கியஸ்தர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணக் குடா நாட்டில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே பயங்கரவாதப் பிரிவினரால் இந்தக் கைது இன்றைய தினம் இடம்பெற்றதாக எமது களநிலைச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

நந்தாவில் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 க்கும் மேற்பட்ட குழுவினரால் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள் குற்றத்தடுப்பு பிரிவினரால் இடம்பெற்று வருகின்றது. 

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 6 இளைஞர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Leave a comment