இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவுக்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்தநிலையில், புதிய துணை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
அதில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை விட இரு மடங்கு வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரான வெங்கையா நாயுடு அபார வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் வெங்கையா நாயுடுவுக்கு ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார்.