மைதானத்தை விரைவாக புனரமைக்க கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

220 0

திருகோணமலை, மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தை மிக விரைவில் புரனமைத்து தருமாறு கோரி கவனஈர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

திருகோணமலை, மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று காலை 9.00மணி முதல் 10.30 வரையில் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கடந்த 6 வருடங்களாக புரனமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தை மிக விரைவில் புரனமைத்து தருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். பெருமளவான பிரதேச விளையாட்டு வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment