பள்ளிவாசல்கள் தாக்குதல் – உயிரிழந்தவர்களின் நினைவு தினம் இன்று

282 0
மட்டக்களப்பு – காத்தான்குடி பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் 27வது ஆண்டு இன்று நினைவுகூரப்பட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹூசைனியா பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலின் போது இரவு நேர தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
சம்பவத்தில், 265 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, காத்தான்குடி உள்ளிட்ட கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கறுப்பு வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினமாக நினைவு கூரப்படுகின்றது.
அத்துடன் இன்று காலை பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a comment