காணி விடுவிப்பு – தமிழ் மக்கள் பொறுமையாக செயற்பட வேண்டும் ஜனாதிபதி சம்பந்தனுக்கு பதில் கடிதம்

218 0

காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தம்முடன் பொறுமையாக இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த வாரம் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பி கடிதம் தொடர்பில் ஜனாதிபதி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும்.

ஆனால் இதற்கு காலநிர்ணயத்தை மேற்கொள்ளும் விடயத்திலேயே படைத்தரபினரால் உறுதியாக எதனையும் கூற முடியாத நிலை இருக்கிறது.

எனினும் மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு படைத்தரப்பினர் தமக்கு உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன்அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் இந்த விடயம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Leave a comment