உயர் தர மாணவர்களுக்கான வகுப்புகள் உள்ளிட்டவைக்கு தடை

235 0

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பொருட்டு இன்று நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரையில் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அத்துடன், பரீட்சையுடன் தொடர்புடைய ஏனைய வளப்பகிர்வு விடயங்களை மேற்கௌவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபரோ நிறுவனமோ இந்த தடைகளை மீறும் பட்சத்தில் அது தொடர்பில் முறையிடுமாறு காவல்துறையினருக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கமான 119 மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் விரைவு தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 0112 784 208 என்ற தொலை பேசி இலக்கத்திற்கோ முறையிட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment