வடக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாம் – மகிந்த

399 0

“தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் ஆரம்­ப­மா­கும்­போது, பொலி­ஸார் மீது­தான் முத­லில் தாக்கு­தல் நடத்­தி­னார்­கள். வடக்­கில் தற்­போது நடை­பெ­றும் சம்­ப­வங்­கள் வெறும் ஆரம்­பம் மட்­டுமே. போகப் போக இன்­னும் நடக்­கும்” இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

மக்­கள் சந்­திப்பு ஒன்­றில் நேற்­றுக் கலந்து கொண்டு கருத்­துக் கூறு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அலு­வ­லர்­கள் மீது நேற்று முன்­தி­னம் வாள்­வெட்­டுத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

அந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
வடக்­கில் தற்­போது நடை­பெ­றும் சம்­ப­வங்­கள் வெறும் ஆரம்­பம் மட்­டுமே. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பு உரு­வா­கும்­போது ஆரம்­பத்­தில் இவ்­வா­று­தான் நடந்­தது. அவர்­கள் ஆரம்­பத்­தில் பொலி­ஸார் மீது­தான் தாக்­கு­தல் நடத்­தி­னார்­கள்.

இப்­போ­தும் அப்­ப­டித்­தான் நடக்­கின்­றது. போகப் போக இன்­னும் நடக்­கும். இந்த அரசு இவற்றை கைகட்டி வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. இதே­வேளை, அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்­கா­க­வுக்கு மாத்­தி­ர­மல்ல ஒட்­டு­மொத்த அர­சுக்கு எதி­ரா­க­வும் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வர­வேண்­டும் – என்­றார்.

Leave a comment