பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 16 பெட்ரோலிய ஊழியர்களுக்கு பிணை

377 0

கடந்த 26 ம் திகதி பெட்ரோலிய ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் பொலிஸாரின் மூலம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 31 ம் திகதிக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தனர்.

எனினும், குறிப்பிட்ட தினத்தில் எவரும் ஆஜராகாததன் காரணமாக அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று (01) குறிப்பிட்ட அனைத்து ஊழியர்களும் நீதிமன்றில் சரணடைந்ததை தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் தலா 100,000 ரூபாய் பிணையில் அனைவரும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment