காசநோயை இல்லாதொழிக்க விசேட செயலமர்வு

382 0

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் காசநோயை இல்லாதொழிக்கும் நோக்கில் விசேட செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்திருந்த இந்த செயலமர்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள சுகாதார அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சின் காசநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் காந்தி ஆரியரத்ன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பிரதம அதிதி கலந்துகொண்டார்.

யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காசநோயை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இத்திட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட சுகாதார அதிகாரிகளும் சான்றிதல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஏ.கேதீஸ்வரன் சுகாதார வைத்தி அதிகாரிகள் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Leave a comment