பாகிஸ்தான் புதிய பிரதமர் நாளை தேர்வு: எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்

356 0

பாகிஸ்தானில் பிரதமர் பதவி காலியாக உள்ள நிலையில் அதை நிரப்புவதற்காக தேர்தல் நாளை நடக்கிறது. இதில் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள்.

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

தற்போது பிரதமர் பதவி காலியாக உள்ள நிலையில் அதை நிரப்புவதற்காக தேர்தல் நாளை (1-ந்தேதி) நடக்கிறது. அதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன் வெளியிட்டார்.

அதற்கான சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தையும் அவர் கூட்டியுள்ளார். இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் தனது தம்பி ஷாபாஸ் ஷெரீப்பை (65) பிரதமர் பதவி வேட்பாளராக அறிவித்துள்ளார்.

தற்போது அவர் எம்.பி. ஆக இல்லாததால் இடைக்கால பிரதமர் பதவிக்கு முன்னாள் பெட்ரோலிய துறை மந்திரி ஷாகித்காசன் அப்பாசி போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் ஷேக் ரஷீத் களம் இறக்கப்படுகிறார். இவர்கள் இருவரும் இன்று மாலை மனுதாக்கல் செய்கிறார்கள். இதற்கிடையே நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தேர்தலில் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள்.பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் மொத்தம் 342 எம்.பி.க்கள் உள்ளனர். அதில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் பிரிவு) கட்சிக்கு மெஜாரிட்டியாக 188 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே அப்பாசி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இடைத்தேர்தலில் போட்டியிடும் ஷாபாஸ் ஷெரீப் வெற்றி பெற்று 45 நாட்களுக்கு பிறகு நிலையான பிரதமர் பதவி ஏற்கிறார்.

Leave a comment