சிறுமி துஷ்பிரயோகம் – பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

344 0

child-abuseகிளிநொச்சி பளைப்பகுதி தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பிரதான சந்தேகத்துக்குரியவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த உதவியதாக கூறப்படும் தனியார் விடுதியின் முகாமையாளர் உட்பட்ட மூவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 5ஆம் திகதியன்று நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்ட அவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.