சென்னையில் பிச்சை எடுத்த 25 சிறுவர்கள் மீட்பு

210 0

சென்னை நகர் முழுவதும் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து பிச்சை எடுக்க ஈடுபடுத்தப்பட்ட 25 சிறுவர்களை மீட்டனர்.

சென்னை நகரில் மெரினா கடற்கரை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறுவர்-சிறுமிகளை பிச்சை எடுக்க வைத்து ஒரு கும்பல் பெரிய அளவில் பணம் சம்பாதித்து வருகிறது. அந்த நாசக்கார கும்பலிடம் இருந்து பிச்சை எடுக்க ஈடுபடுத்தப்படும் சிறுவர்-சிறுமிகளை மீட்பதற்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி உத்தரவிட்டார்.

இதற்காக ‘ஆபரேஷன் முஸ்கான் – 3’ என்ற பெயரில் அதிரடி திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி சென்னை நகர் முழுவதும் நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து பிச்சை எடுக்க ஈடுபடுத்தப்பட்ட 25 சிறுவர்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மாதம் மட்டும் பிச்சை எடுக்க ஈடுபடுத்தப்பட்ட 79 சிறுவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a comment