ரவிராஜ் வழக்கு: கடற்படை அதிகாரிக்கு பிடியாணை

310 0

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் கடற்படை அதிகாரியை கைதுசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 

ரவிராஜின் கொலை வழக்கை மீள விசாரிக்குமாறு கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ஐவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரசாத் ஹெட்டியாராச்சி நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் அவரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமாறும் அவர் கோரினார்.

விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரசாத் ஹெட்டியாராச்சியைக் கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a comment