இந்தியாவுடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீனா நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

401 0
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சிக்கிம் எல்லையில் இந்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த 6 வாரகாலமாக ராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அவரது விஜயம் ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாக இருந்தால், இந்தியா சிக்கிம் எல்லையில் உள்ள தங்களின் படையினரை நிபந்தனை இன்றி வெளியேற்ற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

Leave a comment