கிளிநொச்சி பளை பகுதியில் பெறுமதி மிக்க முதிரை மர குற்றிகள் காவல்துறையினரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன.
மல்லாவி பகுதியில் இருந்து பார ஊர்தி ஒன்றில் மறைத்து கடத்த முற்பட்ட நிலையில் இவை கைப்பெற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மினுவாங்கொடை – தெவலபொல பிரசேத்தில் தொல்பொருட்கள் வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான குற்றத்தடுப்பு பிரிவு நேற்று இவர்களை நேற்று கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தொல் பொருட்கள் சிலவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.