ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
அனைத்து இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், எதிர்வரும் 28ம் திகதி இதன்பொருட்டு வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட தயாராகி வருவதாக, அச் சங்கத்தின் பிரதம செயலாளர் சந்திரசிறி மஹகமகே குறிப்பிட்டுள்ளார்.