பெற்றோலிய தொழிற்சங்கங்களின் இறுதித் தீர்மானம்

326 0

பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவுக்கும் இடையில் இன்று (25) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லையெனவும், இதனால் தமது கோரிக்கைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம்  தொடரும் எனவும் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன்குமார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு  ஜனாதிபதி  தீர்வு கூற வேண்டும் எனவும், அந்தத் தீர்வை தமக்கு ஏற்றுக் கொள்ள முடியுமாக இருந்தால் மாத்திரமே தாம் ஆரம்பித்துள்ள போராட்டத்தைக் கைவிடுவதாகவும் பந்துல சமன்குமார மேலும் கூறியுள்ளார்.

Leave a comment