எத்தியோப்பியாவில் ஆர்ப்பாட்டம் – 100 பேர் பலி

363 0

201608090430313068_Ethiopia-protests-Nearly-100-killed-in-Oromia-and-Amhara_SECVPF.gifஎத்தியோப்பியாவில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரையில் 100 பேர் வரையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கடந்த தினங்களாக தீவிரமடைந்துள்ளது.

வார இறுதி நாட்களில் இடம்பெற்ற அதிகரித்த ஆர்ப்பாட்டங்களின் போது, பாதுகாப்பு தரப்பினருடன் ஏற்பட்ட மோதலில் அதிக எண்ணிக்கையான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.