பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும்

213 0

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள போல் ஸ்கல் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தொடர்கின்றன.

ஜெனீவா பிரேரணை அமுலாக்க விடயத்திலும், மறுசீரமைப்பு விடயத்திலும் முன்னேற்றம் இல்லை.

எனவே, இந்த விடயங்களில் தொடர்ந்தும் தாம் அழுத்தம் கொடுக்கவிருப்பதாக தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a comment