கந்தளாயில் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு

232 0

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்து இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தின் போது உயிரிழந்த நீதிபதி அவர்களின் மெய்ப்பாதுகாவலருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறக் கூடாதென்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேவண்டுமென்றும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment