கிளிநொச்சியில் சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை

211 0
இளஞ்செழியன் மீதான் தாக்குதலை கண்டித்து இன்று ( செவ்வாய் கிழமை) கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்ப்பு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, உயிரிழந்த மெய் பாதுகாவலருக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர்  பின் வீதியில்  யாழ்  மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தி்ன போது உயிரிழந்து நீதிபதியின் மெய்பாதுகாப்பாளருக்கு அனுதாபம் தெரிவிக்கும்  வகையிலும் சந்தையை  பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சேவை சந்தையின் அளைனத்து வியாபார நிலையங்களும்இன்றைய தினம் பூட்டப்பட்டு இவ் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சேவை சந்தையின்  அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டு வியாபார நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.
அத்தோடு, கிளிநொச்சிநகரின் ஏ9 பிரதான வீதியிலும் வியாபார நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனா்.

Leave a comment