குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்காது போனால், முழுப் படையினரும் அவப்பெயர்!

225 0

படையினரின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டுமாயின் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இவ்வாறு குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்காது போனால், முழுப் படையினரும் அவப்பெயருக்கு உள்ளாவார்கள் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிலர் படையினருக்காக முதலைக் கண்ணீர் சிந்தி ஊடக கண்காட்சிகளை நடத்தி வருகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment