யாழ். துப்பாக்கிச் சூடு ; சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது – மஹிந்த

236 0

யாழ். நல்லூர்  பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான துப்பாக்கி பிரயோக அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டால், சாதாரண மக்களின் பாதுகாப்பு எவ்வாறு என்பதனை சிந்தித்து பார்க்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்ற போதிலும் இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதென மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment