ரோபோக்கள் விளையாடும் உலக கிண்ண கால்பந்து போட்டி – ஜப்பானில் அடுத்த வாரம் ஆரம்பம்

278 0

ரோபோக்கள் விளையாடும் உலக கிண்ண கால்பந்து போட்டி ஜப்பானில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன.

எந்திர மனிதன் எனப்படும் ‘ரோபோ’க்கள் மேலைத் தேய நாடுகளில் மருத்துவம் உணவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்துவரும் நிலையில், விளையாட்டு துறையிலும் சாதனை படைத்துள்ளன.

இந்த நிலையில் ரோபோக்கள் விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இடம்பெற்ற ரோபோக்களுக்கான உலகக் கிண்ண போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகள் தலா 5 தடவை சாம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment