அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி தூக்கிட்டு தற்கொலை

347 0

201608091111300168_Former-Arunachal-Pradesh-chief-minister-Kalikho-Pul_SECVPFஅருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  அருணாச்சலப்பிரதேசத்தின் தற்போதைய முதல் மந்திரியான நபாம் துகி மீது அதிருப்தி கொண்ட 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று அம்மாநில முதல் மந்திரியாக 19-2-2016 முதல் 13-7-2016 வரை பதவி வகித்தவர் கலிக்கோ புல்.

முன்னதாக, கெகாங்க் அபாங் தலைமையிலான மாநில அமைச்சரவையில் நிதித்துறை மந்திரியாக நான்காண்டு காலம் பதவிவகித்த கலிக்கோ புல், இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த மாதம் முதல் மந்திரி பதவியை இழந்த பின்னர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இந்த விபரீத முடிவை தேர்ந்தெடுத்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

கல்லூரியில் படித்தபோது மாணவர் சங்க பொதுச்செயலாளராக இருந்த கலிக்கோ புல், 1995-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் சுமார் 22 ஆண்டுகாலம் இவர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.