சட்டவிரோத வாகன உதிரிப்பாக இறக்குமதி நிலையம் சுற்றிவளைப்பு

310 0

சட்டத்திற்கு மாறான முறையில் வாகன உதிரிப் பாகங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்று பொத்துஹர, தம்பெக்க பிரதேசத்தில் பாணந்துறை வலான மத்திய மோசடி தடுப்பு பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. 

அந்தப் பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது சட்டவிரோதமான முறையில் உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்து தயாரிக்கப்பட்ட மோட்டார் கார் ஒன்றும் ஜீப் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொல்கஹவல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் ஆகஸ்ட் மாதம் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a comment