அரச மருத்துவ அதிகாரிகள் சங்க காரியாலய வளாகத்தில் தீவிர நிலை

222 0

மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை கைது செய்ய சென்ற போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்க காரியாலய வளாகத்தில் தீவிர நிலை ஏற்பட்டது.

சைட்டத்திற்கு எதிராக நேற்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள்இ அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்இ ஜே.வீ.பியின் அரசியல்குழு உறுப்பினர் கே.டி லால்காந்தஇ சோஷலிச முற்போக்கு கட்சியின் ஊடக பேச்சாளர் துமிந்த நாகமுவ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் வெளியேறிய மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை சிவில் உடையில் பிரவேசித்தவர்கள் கைது செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போதுஇ பல்கலைகழக மாணவர்கள்இ மருத்துவர்கள்இ அரசியல் பிரமுகர்கள் இணைந்து அவர் கைது செய்யப்படுவதை தடுத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே அங்கு தீவிர நிலை ஏற்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வெள்ளை நிற வேன் ஒன்றில் பிரவேசித்த சிவில் உடையணிந்தவர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment