மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார். 

394 0

ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அடுத்தவாரம் அளவில் பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக அவர் கடந்த 2015ஆம் ஆண்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment