யாழ்.வர்த்தகர் மாயம்! கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்?

215 0

யாழ்ப்பாணத்தில் பிரபல ஊடகவியலாளர் ஒருவரின் தந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து காணவில்லை எனவும், வர்த்தகர் என்பதால் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தகரான 63 வயதுடைய வே. நடராஜன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.  குறித்த நபர் யாழ்ப்பாண நாவலர் வீதியில் வணிக நிலையம் ஒன்றினை நடத்திவருவதாகவும். கடந்த வெள்ளிக்கிழமை  வணிக நிலையத்திற்கு பொருள் கொள்முதல்  செய்ய யாழ்ப்பாணத்திற்கு  சென்றவேளையிலேயே காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மேலதிக விசாரணைகள் தொடர்பாக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக 0777595256(குகன்) என்னும் இலக்கத்திற்கு அறிவிக்கவும்.

Leave a comment