முல்லைத்தீவு பாடசாலையில் வெடிப்பு: 8 மாணவர்கள் வைத்தியசாலையில்!

234 0

முல்லைத்தீவு மாவட்டம் முகத்துவாரம் பாடசாலையில் இன்று(18) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வெடிபொருளான ஜெலக்நைற் என்ற வெடிபொருள் வெடித்ததாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.

குறித்த வெடிப்புச் சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள்அவ்விடத்திலேயே மயக்கமடைந்துள்ளனர். இதனையடுத்து குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக மாஞ்சோலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையை முல்லைத்தீவு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment