மறைக்கப்பட்ட மனிதர்களின் பதிவுகள் – காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பான ஆவணம் வெளியீடு

261 0

மறைக்கப்பட்ட மனிதர்களின் பதிவுகள் என்ற காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பான ஆவணம்  மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால்  மன்னார் நகரசபை மண்டபத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களினால் இந்த ஆவணத்தின் முதலாவது பிரதி மன்னார் மறை  மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் சட்டத்தரணிகள் மனிதஉரிமை செயற்ப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment