கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூதாட்டிக்கு சக்கர நாற்காலி

283 0

கேப்பாபுலவு காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் ஒரு மூதாட்டி சக்கர நாற்காலியிலேயே நடமாடி வருவதாகவும்  தனது சக்கர நாற்காலி பழுதடைந்துவிட்டதாகவும் ஓர் புதிய நாற்காலியை தந்துதவுமாறு போராடும் அம்மக்களை சந்திக்க சென்ற வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கமைய  பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களால்  இந்த மூதாட்டிக்கு புதிய நாற்காலி வழங்கப்பட்டது.

இச்சக்கர நாற்காலியானது முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாற்றுவலுவுள்ளோர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்கும் ஒளிரும்வாழ்வு அமைப்பினருக்கு யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர்,  நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டு ஒளிரும்வாழ்வு அமைப்பிடமிருந்து  குறித்த மூதாட்டிக்கு பாராளுமன்ற உறுப்பினரால் கொண்டுவந்து வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment