ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் கோரிக்கை

239 0

கனடாவில் தங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு, ஹொங்கொங்கில் உள்ள இரண்டு இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் இரகசியங்களை வெளியிட்ட முன்னாள் புலனாய்வு அதிகாரியான எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு கடந்த 2013ம் ஆண்டு ஹொங்கொங்கில் அடைக்கலம் கொடுத்தமையால் அவர்கள் பிரபலமடைந்தனர்.

தற்போது அவர்கள் ஹொங்கொங்கில் இருந்து நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ள அவர்கள், தங்களின் பிள்ளைகளையும் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் கனடாவில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளனர்.

ஹொங்கொங்கில் இருந்து தாங்கள் நாடுகடத்தப்படுவதற்கு முன்னதாக, தங்களை கனடாவில் குடியேற்றும் நடவடிக்கைகைளை துரிதப்படுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment