தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- இருவர் கைது

398 0

செட்டிக்குளம் – நெரியன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கருத்து முரண்பாடு வலுப்பெற்றமையே தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் பலியானவர் நெரியன்குளம் – மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவராகும்.

மேலும், சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment