மின்கணக்கு கூற்று (மின்சார பட்டியல் )பல வருடங்களாக வழங்கப்படவில்லை

398 0

வடமாகாணத்தில் அமைந்துள்ள மாவட்ட்ங்களின் பல இடங்களுக்கு மின்சாரசபையினரால் வருடக்கணக்கில் மின்சாரப்பட்டியல் வழங்கப்படவில்லை இவ் பட்டியலை மாதாந்தம் கொடுப்பதன் மூலம் மக்கள் தங்கள் மாதாந்த வருமானத்தில் மின்சாரப்பட்டியலை செலுத்துவது இலகுவானது மாறாக வருடத்திற்கு ஒருமுறையோ பல மாதத்திற்கு ஒரு முறையோ கொடுப்பதனால் பெரிய தொகையினை செலுத்த முடியாமல் மக்கள் அவதியுறுகின்றார்கள் .முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராமங்களில் மின்சாரம் வழங்கப்பட்டதிலிருந்து மின்கணக்கு கூற்று வழங்கப்படவில்லை .
இது தொடர்பாக மின்கணக்கு கூற்று வழங்குவதற்கு போதுமான ஊழியர்கள் இல்லை என தெரிய வருகின்றது வட மாகாணத்தில் வேலையற்ற இளையோர் பலர் இருப்பதும் இதில் சுட்டி காட்டப்பட வேண்டிய விடயமாகும் .

உங்கள் இடத்திலும் மின்கணக்கு கூற்று வழங்கப்படவில்லையெனில் கீழே கருத்துக்கள் என்ற பகுதியில் உங்கள் ஊரின் பெயரை குறிப்பிடுங்கள் .

Leave a comment