வடக்கு ரயில் பாதையின் ஒரு பகுதி நாளை (17) முதல் மூடப்படும்

330 0

வடக்கு ரயில் பாதையின் திருத்த நடவடிக்கைகள் காரணமாக நாளை (17) முதல் மதவச்சி- தலைமன்னார் ரயில் பாதையின் போக்குவரத்து இடைநிறுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

ஒரு சில தினங்களுக்கு இவ்வாறு இந்த ரயில் பாதை மூடப்படவுள்ளதாகவும் ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இப்பாதை வழியில் உள்ள புதிய பாலம் ஒன்று அமைக்கும் பணி காரணமாகவே இவ்வாறு பாதை மூடப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment