மிளகு உற்பத்தியாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்

5103 0

மிளகுக்கான நியாயமான விலையைப் பெற்றுத் தருமாறு அரசாங்கத்தை கோரும் வகையில் இன்றும் (15) சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மிளகாய் விவசாயிகள் மித்தெனிய நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மிளகுக்கான சந்தைவிலை குறைவடைந்துள்ளதனால், தமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதற்கான தீர்வை அரசாங்கம் தாமதிக்காமல் பெற்றுத் தருமாறும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கோரியுள்ளனர்.

இதற்கு முன்னரும் விவசாயிகள் மிளகுக்கான கொள்வனவு விலையை அதிரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment