தஞ்சாவூரில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பலி

8480 0

தமிழக்தின் தஞ்சாவூர் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 பேர் வரையில் பலியாகினர்.

அரச பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாக இந்திய தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது காயமடைந்த 20க்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சதோரா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த தாக்குதல் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இவ்வாறான சம்பவங்கள் காரணமாக அங்கு பதற்றமான நிலை காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அங்கு தீவிரவாதிகள் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment